பாறையில் இருந்து தவறி விழுந்த காட்டெருமை : 4 நாட்களாக உயிருக்கு போராட்டம்
குன்னூர் அருகே மூப்பர்காடு கிராமத்தில் 10 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்த காட்டெருமை ஒன்று கடந்த 4 நாட்களாக உயிருக்கு போராடி வருகிறது.
குன்னூர் அருகே மூப்பர்காடு கிராமத்தில் 10 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்த காட்டெருமை ஒன்று கடந்த 4 நாட்களாக உயிருக்கு போராடி வருகிறது. உயரத்தில் இருந்து விழுந்ததில் காட்டெருமையின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கிராமமக்கள் கூறுகின்றனர்.இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கிராமமக்களே தங்களுக்கு தெரிந்த மருத்துவ முறைகளை கையாண்டு வருகின்றனர்.
Next Story