போராடி பெற்ற காவிரி நீரை கடலில் கலக்க விடுவதா?

கொள்ளிடம் ஆற்றின் வழியே வரும் காவிரி நீர் எவ்வித பயனுமின்றி கடலில் கலந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
போராடி பெற்ற காவிரி நீரை கடலில் கலக்க விடுவதா?
x
காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடத்தில் 98 ஆயிரம் கன அடிநீர் திறந்து விடப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளோ, கதவணைகளோ இல்லாத‌தால், கர்நாடக அரசிடம் இருந்து போராடி பெற்ற காவிரி நீர், நேரடியாக கடலில் கலந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வரும் ஆண்டுகளில், பருவ காலம் தொடங்கும் முன்பே மராமத்து பணிகளை முடிப்பதுடன், கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்