காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை

தற்கொலை செய்து கொண்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருத்தணி, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை
x
 திருவள்ளூர் மாவட்டம் பொன்போடி மேட்டு காலனியை சேர்ந்த மோகன், அகிலா தம்பதியினரின் இரண்டாவது மகன் சக்திவேல்,  கடந்த நான்காம் தேதி விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

திருமணம் நிச்சயமான பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவரது தற்கொலைக்கு காரணமான பத்து பேரை கைது செய்ய வலியுறுத்தி சக்திவேல் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் திருத்தணி, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்