கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து : மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர்
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து வரும் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை 40ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து வரும் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை 40ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியதால் 16 கண் பாலத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் அணையை பார்வையிட்டு வருகின்றனர். அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story