நண்பர்களுடன் இணைந்து நூலகங்களை மேம்படுத்தும் இளைஞர்

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் மூன்று ஆண்டுகளில் 50 நூலகங்களை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நண்பர்களுடன் இணைந்து நூலகங்களை மேம்படுத்தும் இளைஞர்
x
சென்னை ஸ்ரீபெரும்பதூரில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் பொறியியல் கல்லூரி மாணவரான கீர்த்தி வாசன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நூலகங்களை மேம்படுத்தும் திட்டத்தினை தொடங்கியுள்ளார்.  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 5 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கிய அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் 50 நூலகங்களை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்தார். அவரின் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்