கேரள அரசுக்கு உதவ தயாராக உள்ளோம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கேரள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழகம் 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது
கேரள அரசுக்கு உதவ தயாராக உள்ளோம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
கேரள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழகம் 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக மக்கள் மற்றும் அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், கேரள அரசு கேட்கும் உதவிகளை செய்து தர தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாகவும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்