அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு : சிபிஐ விசாரணை கோரும் மனு தள்ளுபடி

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு : சிபிஐ விசாரணை கோரும் மனு தள்ளுபடி
x
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற முறைகேடுகளால் நன்றாக படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஸ், சதீஷ்குமார், தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்