கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் பலி

கோவையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர்
கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் பலி
x
கோவையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர். கோவை பைபாஸ் சாலையில் இந்த விபத்து நடந்தது. இதில் 2 கார்களிலும் பயணம் செய்த 6 பேர் காயமடைந்தனர். 

மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வெற்றிவேல் என்பவரின் மீதும் கார்கள் மோதியதால் அவர் படுகாயமடைந்தார். இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்