தாயை ஆட்டுக்கல்லால் அடித்து கொலை செய்த மகன் கைது

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், தாயை ஆட்டுக்கல்லால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
தாயை ஆட்டுக்கல்லால் அடித்து கொலை செய்த மகன் கைது
x
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில்,   தாயை ஆட்டுக்கல்லால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.  இங்குள்ள கக்கன் நகரைச் சேர்ந்த காளியம்மாள் என்பவருக்கும், அவரது மகன் காளிமுத்துவுக்கும் இடையே ஏற்பட்ட சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாய் காளியம்மாளை ஆட்டுக்கல்லால் அடித்து கொலை செய்து விட்டு காளிமுத்து தப்பி சென்றுள்ளார். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் காளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய காளிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்