தங்க கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை விமான நிலைய ஊழியர்களே வெளியே கொண்டு செல்ல உதவியதாக கூறப்படுகிறது.
தங்க கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல்
x
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை விமான நிலைய ஊழியர்களே வெளியே கொண்டு செல்ல உதவியதாக கூறப்படுகிறது. இதனை கண்காணித்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் அந்த ஊழியர்களை பிடித்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் எடையுள்ள 46 தங்க கட்டிகள் மற்றும் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.இதனையடுத்து திருச்சி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் 3 பேரையும்  ஆஜர்படுத்தினர். மூவரையும் வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்