பெட்ரோல்,டீசல் விற்பனை நிலையங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சென்னையில் 4 இடங்களில் பெட்ரோல்,டீசல் விற்பனை நிலையங்களில் ஆவணங்களை அள்ளிச் சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர்.
பெட்ரோல்,டீசல் விற்பனை நிலையங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
x
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களில், வசூல் பணத்தை வங்கியில் சரிவர செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுவதாக  லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் 15 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 4 குழுக்காக பிரிந்துசென்னையில் 4 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.இராயப்பேட்டை, எருக்கஞ்சேரி, கீழ்பாக்கம் ,கோயம்பேடு ஆகிய இடங்களில் உள்ள  பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அவர்கள், முடிவில் முறைகேடு நடந்தது தொடர்பான ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்