25 வயது இளம்பெண் படுகொலை : தலை,கை,கால்களை வெட்டி குளத்தில் வீச்சு

கோவையில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கொலை செய்யப்பட்டு,கை,கால்கள் தனித்தனியாக வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
25 வயது இளம்பெண் படுகொலை : தலை,கை,கால்களை வெட்டி குளத்தில் வீச்சு
x
கோவை பனைமரத்தூர் பகுதியில் உள்ள செல்வாம்பதி குளத்தில் கை, கால்கள் மற்றும் தலை இல்லாமல் இளம்பெண் உடல் ஒன்று மிதந்தது.காவல்துறையினர் வந்து,மற்ற உடல் பாகங்களை தேடியபோது, அருகிலேயே சாக்கு மூட்டை ஒன்று மிதப்பது தெரியவந்தது. அதற்குள்,தலை மற்றும் கைகள் அழுகிய நிலையில் இருந்தன. எனவே,சடலத்தை குளத்தில் வீசப்பட்டு 3 நாட்கள் இருக்கலாம் என காவலர்கள், தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம் என கருதப்படுகிறது.  குளத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறியும் பணியில், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்