"பள்ளி கட்டடத்தை சரி செய்ய உடனடி நடவடிக்கை" - அமைச்சர் செங்கோட்டையனுக்கு, வைகோ பாராட்டு
கல்குவாரியால் பழுதடைந்த பள்ளி கட்டடத்தை சீர் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக உத்தரவிட்ட அமைச்சர் செங்கோட்டையனுக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்குவாரியால் பழுதடைந்த பள்ளி கட்டடத்தை சீர் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக உத்தரவிட்ட பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். சிவலிங்காபுரத்தில் புதிதாக செயல்பட்டு வரும் கல்குவாரியில் வைத்த வெடியால் அருகில் இருந்த அரசு பள்ளி கட்டடம் சேதமடைந்தது.
இதில் 2 மாணவர்கள் காயமடைந்ததால், கல்குவாரியை மூட கோரி சகமாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பள்ளிக்கு வந்த வைகோ மாணவர்களை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கினார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளி கட்டடத்தை சரி செய்ய கோரிக்கை விடுத்ததாகவும், அவர் உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் வைகோ பாராட்டு தெரிவித்தார்.
Next Story