போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார்.
போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு
x
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து செயலாளர் டேவிதார், அனைத்து போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நடப்பு நிதியாண்டில் 600 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது, வெளியிடப்பட்ட 21 அறிவிப்புகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்

Next Story

மேலும் செய்திகள்