ரூ.5 லட்சம் மதிப்பிலான கலப்பட டீ தூள் பறிமுதல்

சென்னையில் 5 டன் கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் மதிப்பிலான கலப்பட டீ தூள் பறிமுதல்
x
சென்னையில் 5 டன் கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, தாம்பரத்தில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். அதில்,  5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. டீ தூளில் மரப்பட்டை, முந்திரி தோல் போன்றவற்றை மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு கலந்து விற்பனை செய்திருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இது தொடர்பாக, ராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்