செல்போன்களை கொள்ளையடிக்கும் 'லிப்ட் கொள்ளையர்கள்'..!

சென்னையில் செல்போன்களை கொள்ளையடிக்கும் லிப்ட் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செல்போன்களை கொள்ளையடிக்கும் லிப்ட் கொள்ளையர்கள்..!
x
நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மோசஸ்,  நேற்றிரவு 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருக்கு "லிப்ட்" கொடுத்துள்ளார். 
சிறிது தூரம் சென்றதும் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் , மோசஸ்சின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து மோசஸ் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச்சென்று அந்த இளைஞரை மடக்கினார். அங்கிருந்த பொதுமக்கள், செல்போன் பறித்த இளைஞருக்கு தர்மஅடி கொடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதேபோன்று கடந்த பிப்ரவரி மாதம் அம்பத்தூரில், செல்போன் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து லிப்ட் கேட்பது போல் நடிக்கும் செல்போன் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்