"சிலையை ஒட்ட வைத்து பூஜை செய்தது அம்பலம்" - ஆகம விதியை மீறியதற்கு பக்தர்கள் கண்டனம்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சேதமடைந்திருந்த சிலையை ஒட்ட வைத்து பூஜை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மூலஸ்தானம் அருகே உள்ள சண்டிகேஸ்வரர் சிலையின் கழுத்து உடைந்த நிலையில் சிமெண்ட் பூசி ஒட்ட வைத்து பூஜை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆகம விதிகளை மீறி சுவாமி பூஜையில் அலட்சியமாக செயல்பட்ட கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கோயிலில் உள்ள அனைத்து சிலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story