கொலை வழக்கில் கைதுக்கு பயந்து விஷம் குடித்த ஜோதிடர்

கொலை செய்துவிட்டு போலீசாரின் கைதுக்கு பயந்து விஷம் குடித்த ஜோதிடர் ஒருவரை, மருத்துவமனையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொலை வழக்கில் கைதுக்கு பயந்து விஷம் குடித்த ஜோதிடர்
x
சேலம் மாவட்டம், காங்கியானூரைச் சேர்ந்த தொழிலாளர் சுரேஷ் என்பவர் கடந்த 7ம் தேதி, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சுரேஷின் மனைவி அலமேலு, ஜோதிடர் சுந்தரம் மற்றும் சிலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து அலமேலு உள்ளிட்ட மூவரை கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோதிடர் சுந்தரத்தை போலீசார் கைது செய்துள்ளனர். ஓமலூர் நீதிமன்றத்தில் சுந்தரத்தை ஆஜர்படுத்திய போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்