மேட்டூர் அணை நீர் மட்டம் 72 அடியாக உயர்வு

கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணை நீர் மட்டம் 72 அடியாக உயர்வு
x
கர்நாடகா, காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறந்து விடுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72 அடியை எட்டியுள்ளது. அணைக்கு,
விநாடிக்கு, 34 ஆயிரத்து 427 கன் அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம், விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்ப்பதால், அம்மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. இதனிடையே, ஓகேனக்கல் முதல் மேட்டூர் வரை, 75 கிலோ மீட்டர் தூர கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்