உள்ளாடையில் தங்கம் கடத்தல் - பிடிபட்ட பயணி

திருச்சி விமான நிலையத்தில் சோதனையின் போது பிடிபட்டார்
உள்ளாடையில் தங்கம் கடத்தல் - பிடிபட்ட பயணி
x
* திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்து சேர்ந்த, 'ஏர் ஏசியா' விமானப் பயணிகளை, மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

* அப்போது, உள்ளாடைக்குள், 660 கிராம் தங்க கட்டிகளை மறைத்து எடுத்துவந்த, சென்னையை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். இவர் கடத்திய தங்கத்தின் மதிப்பு 20 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்.

* இதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த சுமித்ரா என்பவர் தனது உடலில் அணிந்து, கடத்தி வந்த தங்கச் சங்கிலி, வளையல் என 10 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்