பழசை மறக்காத தோனி.. சச்சின் குறித்து ஓபன் டாக்

x

பழசை மறக்காத தோனி.. சச்சின் குறித்து ஓபன் டாக்

கிரிக்கெட்டில் சச்சினைப் போல் விளையாட வேண்டும் என்பதே தனது கனவாக இருந்தது என முன்னாள் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமான தோனி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தோனி, கிரிக்கெட்டை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கரையே தனது கடவுளாக நினைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் சச்சினை போல் தன்னால் பேட் செய்ய முடியாது என்பதை பின்னர் உணர்ந்ததாக தெரிவித்த அவர், தனது இதயத்தில் சச்சினை போல விளையாட வேண்டும் என்ற கனவு எப்போதும் இருந்ததாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்