IND vs SA || வெற்றி யாருக்கு? தொடரை வெல்ல இந்தியா தீவிரம்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 3 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 122 ரன்களே தேவையாக உள்ளது.
x
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களும் தென்னாப்பிரிக்கா அணி  229 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 240 ரன்களை நிர்ணயித்தது. இதனைத் தொடர்ந்து தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 3 ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்களே தேவையாக உள்ள நிலையில் எல்கர் 46 ரன்களுடனும், துசன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 4 ஆவது நாளான இன்று தொடரை வெல்ல இந்திய அணியும், தொடர் வெற்றி வாய்ப்பை தக்க வைக்க தென்னாப்பிரிக்கா அணியும் தீவிரமாக முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்