இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா - ரஞ்சி கோப்பை உள்ளிட்ட 3 தொடர்கள் ஒத்திவைப்பு

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக ரஞ்சி கோப்பை உள்ளிட்ட 3 உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.
x
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக ரஞ்சி கோப்பை உள்ளிட்ட 3 உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி ரஞ்சி கோப்பை, சி.கே. நாயுடு கோப்பை மற்றும் மகளிர் சீனியர் இருபது ஓவர் லீக் ஆகிய உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் சூழலைப் பொறுத்து ஒத்திவைக்கப்பட்ட தொடர்களுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்