பள்ளி மாணவர்களை சந்தித்த நீரஜ் சோப்ரா - விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல்

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, குஜராத் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
பள்ளி மாணவர்களை சந்தித்த நீரஜ் சோப்ரா - விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல்
x
ஒலிம்பிக் வெற்றியாளர்களிடம் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு, பிரதமர் மோடி கேட்டு இருந்தார். இதன்படி, அகமதாபாத்தில் 75-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்களை ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சந்தித்தார். அப்போது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம்  நீரஜ் சோப்ரா பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு, ஈட்டியெறிதல், வில்வித்தை விளையாட்டுகளை கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். நீரஜ் சோப்ராவுடன் நேரத்தை செலவிட்ட பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Next Story

மேலும் செய்திகள்