ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பு - இன்று அறிவிப்பு

ஐபிஎல் அணிகள் வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
x
ஐபிஎல் அணிகள் வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

10 அணிகள் பங்குபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தொடங்கும் நிலையில், வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 பேரை தக்கவைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவுபெறுகிறது. சென்னை அணி தோனி, ஜடேஜா, மொயின் அலி, ருத்துராஜ் கெய்க்வாடை தக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது. மும்பை அணி ரோகித், பும்ரா, இஷான், பொல்லார்டு ஆகியோரையும், பெங்களூரு அணி கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் ஆகியோரையும் தக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்