இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி - முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த‌து

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்த‌து.
இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி - முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த‌து
x
கான்பூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 345 ரன்கள் சேர்த்த‌து. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. 49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 234 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று நியூசிலாந்து வீர‌ர்கள் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், நியூசிலாந்து அணி 165 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த‌ நிலையில், ஒரு விக்கெட் மிச்சம் இருந்த‌து. இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த‌து. இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வரும் 3ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்