இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு ஸ்வெர்வ் முன்னேற்றம்

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் முன்னேறி உள்ளார்.
இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு ஸ்வெர்வ் முன்னேற்றம்
x
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சுடன், ஜெர்மனி வீரர் ஸ்வெர்வ் பலப்பரீட்சை நடத்தினார். பரபரப்பாக நடைபெற்ற முதல் செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் ஸ்வெர்வ் கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டில் சளைக்காமல் ஆடிய ஜோகோவிச், 4-க்கு 6 என்ற கணக்கில் அந்த செட்டை தனதாக்கினார். வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட் ஆட்டத்தில் அனல் பறந்த நிலையில், 6-க்கு 3 என்ற கணக்கில், 3வது செட்டை கைப்பற்றி, ஜோகோவிச்சை ஸ்வெர்வ் வீழ்த்தினார். 


Next Story

மேலும் செய்திகள்