பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெர்வ்

ஜெர்மனியை சேர்ந்த முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெர்வும் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்.
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெர்வ்
x
 ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், நார்வே வீரர் கேஸ்பர் ரூடுடன்(Casper Ruud) ஸ்வெர்வ் மோதினார். இதில் முதல் செட்டை 7-க்கு 5 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்வெர்வ், இரண்டாவது செட்டை 6-க்கு 4 என்ற கணக்கில் தனதாக்கி போட்டியில் வெற்றி பெற்றார். இன்று இரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரர் மெத்வதேவுடன், ஸ்வெர்வ் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்