ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி : தடுப்பூசி செலுத்தாத வீரர்களுக்கும் அனுமதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விளையாட்டு வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி : தடுப்பூசி செலுத்தாத வீரர்களுக்கும் அனுமதி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரியில் மெல்போர்னில் நடைபெற உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட வீரர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலியா வருவதற்கான விசா வழங்கப்படும் என்று  விக்டோரியா மாகாண அரசு தெரிவித்திருந்தது. இது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஜோகோவிச் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இந்த முடிவின் மூலம் போட்டிகளில் பங்கேற்பார்களா இல்லையா என்ற சந்தேகம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வீரர் வீராங்கனைகளும் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும், ஆனால் அவர்கள் போட்டிகளில் பங்கேற்கும் முன்பாக கட்டாயம் 2 வாரங்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்