ஐ.பி.எல் தொடர்; மேலும் 2 புதிய அணிகள் - ஐ.பி.எல் அணிகள் எண்ணிக்கை 10-ஆக உயர்வு

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
ஐ.பி.எல் தொடர்; மேலும் 2 புதிய அணிகள் - ஐ.பி.எல் அணிகள் எண்ணிக்கை 10-ஆக உயர்வு
x
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. ஐ.பி.எல் தொடரில் ஏற்கெனவே 8 அணிகள் விளையாடி வந்த‌ நிலையில், அடுத்த ஆண்டு முதல் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்படும் என இந்திய கிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்த‌து. புதிய அணிகளுக்கான ஏல நடைமுறையை கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. இந்நிலையில் ஏல நடைமுறை நிறைவடைந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய புதிய அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அகமதாபாத் அணியை சி.வி.சி  நிறுவனம் 5 ஆயிரத்து 625 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளதாகவும், லக்னோ அணியை 7 ஆயிரத்து 90 கோடி ரூபாய்க்கு ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் பெற்றுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்