"அரசனை அன்புடன் வரவேற்கிறோம்" - டுவிட்டரில் பி.சி.சி.ஐ கருத்து

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி இணைந்து உள்ளார்.
x
அணியினருடன் தோனி இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பிசிசிஐ பதிவிட்டு உள்ளது. அந்த பதிவில், தோனி மீண்டும் அணியில் இணைந்து இருப்பதாகவும், அரசனை அன்புடன் வரவேற்பதாகவும் பிசிசிஐ தெரிவித்து உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர், தோனி ஓய்வு பெற்றார். தற்போது 2 ஆண்டுகள் கழித்து ஆலோசகராக, இந்திய அணியில் தோனி இணைந்து இருப்பது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்து உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்