"அடுத்த சீசனில் தோனி தக்கவைக்கப்படுவார்" - சென்னை அணி நிர்வாகம் தகவல்

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் தோனி தக்க வைக்கப்படுவார் என அணியின் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...
அடுத்த சீசனில் தோனி தக்கவைக்கப்படுவார் - சென்னை அணி நிர்வாகம் தகவல்
x
ஐபிஎல் தொடரை ரசிக்கும் பல கோடி ரசிகர்களில், பெருங்கூட்டத்தை தனது தோளில் சுமந்து உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் மகேந்திர சிங் தோனி...

ராஞ்சி சொந்த ஊராக இருந்தாலும், எப்போது சென்னை அணிக்காக தேர்வானோரோ அன்று முதல் இந்த நிமிடம் வரை சென்னைக்காரராகவே கொண்டாடப்படுகிறார்.

தமிழ்நாட்டில் தல என்றாலே அஜித்குமார் நினைவுக்கு வந்துக்கொண்டிருந்த சமயத்தில், தோனிக்கும் அந்த அந்தஸ்தை கொடுத்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் தனது அத்தியாத்தை முடித்துவிட்டாலும், ஐபிஎல்லில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

2 சீசனாக தோனியிடம் பழைய பேட்டிங்கை பார்க்கமுடியவில்லையே என்ற ஏமாற்றம் ரசிகர்களுக்கு இருந்தாலும், கேப்டனாக களத்தில் காண்பதே மகிழ்ச்சி தான்..

இருப்பினும் அவருக்கு இதுதான் கடைசி தொடராக இருக்குமோ என கேள்விகள் எழுந்து வர, சென்னையில் தான் எனது கடைசி போட்டி, சென்னை ரசிகர்கள் முன்னிலையில்தான் ஐபிஎல்லில் இருந்து விடைபெறுவேன் என கூறியுள்ளார் தோனி..

இந்த அறிவிப்பு பழைய பேட்டிங்கை பார்க்க முடியவில்லை என வருத்தப்பட்ட ரசிகர்களையும், குதுகலப்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்