ஐபிஎல் - நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி - "நாளை முதல் டிக்கெட் முன்பதிவு"

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
x
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 14ஆவது ஐபிஎல் தொடர், கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை மீண்டும் நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் முதல் போட்டி, துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரை நேரில் காண, ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் அமர வைக்கப்படுவர் எனவும், நாளை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்