மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கம்பேக் : அடுத்தடுத்து கோல் - அசத்திய ரொனால்டோ

நீண்ட இடைவெளிக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி அடுத்தடுத்த கோல்களை அடித்து ரொனால்டோ அசத்தியுள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கம்பேக் : அடுத்தடுத்து கோல் - அசத்திய ரொனால்டோ
x
12 வருடங்கள்... 118 நாட்கள்... இவ்வளவு நீண்ட இடைவெளிக்கு பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக மீண்டும் களமிறங்கினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ...ஆதர்ச நாயகன் மீண்டும் களம் காண்பதை கண்டு, விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷம் எழுப்பி ரொனால்டோவை உற்சாகமாக வரவேற்றனர் ரசிகர்கள்...NEW CASTLE அணிக்கு எதிரான போட்டி அது... ரொனால்டோவின் ஒவ்வொரு மூவையும் ஆசை ஆசையாக ரசித்தனர் ரசிகர்கள்...தொடக்கத்தில் சிறு தடுமாற்றங்கள் ஏமாற்றமடைய வைத்தாலும், முதல் பாதி இறுதியில் மிக எளிய வாய்ப்பை ரொனால்டோ கோலாக மாற்ற, மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர் ரசிகர்கள்...62வது நிமிடத்தில் சென்டர் கோர்ட்டில் சக வீரர் கொடுத்த பாஸை லாவகமாக பயன்படுத்தி கோல் போஸ்ட் வரை கடத்தி சென்ற ரொனால்டோ, கோல் கீப்பரை குறிவைத்து பந்தை உதைத்து சம்பவம் செய்தார். கோல் அடித்ததற்கு பின்னர் தனது டிரெட்மார்க் ஸ்டைலில் ரொனால்டோ மகிழ்ச்சியை வெளிப்படுத்த, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களுக்கு விருந்தானது அந்த நிமிடங்கள்... 
போட்டியை நேரில் காண வந்திருந்த ரொனால்டோவின் தாயார், மகனின் அடுத்தடுத்த கோல்களை பார்த்து ஆனந்த கண்ணீர் விடுத்த புகைப்படங்கள் இணையத்தை அலங்கரித்துள்ளன.இவ்வளவு எதிர்பார்ப்புக்கு காரணம் 2003 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான அவரது பயணம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கானது.. அதற்கு பின்னர் ரியல் மாட்ரீட்டில் கோலோச்சி, பின்னர் ஜுவன்டஸ் அணிக்காக விளையாடியவர், மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பிவிட்டார்... கம்பேக் போட்டியில் அடுத்தடுத்த கோல்களால் ரசிகர்களை கொண்டாட வைத்துவிட்டார். இனிவரும் போட்டிகளிலும் ரொனால்டோவின் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சனிக்கிழமை இரவை கடத்தியுள்ளனர் ரசிகர்கள்...



Next Story

மேலும் செய்திகள்