இந்தியா, இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ரத்து - இறுதி டெஸ்ட் போட்டி ரத்து என அறிவிப்பு

இந்தியா, இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ரத்து - இறுதி டெஸ்ட் போட்டி ரத்து என அறிவிப்பு
இந்தியா, இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ரத்து - இறுதி டெஸ்ட் போட்டி ரத்து என அறிவிப்பு
x
இந்தியா, இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ரத்து - இறுதி டெஸ்ட் போட்டி ரத்து என அறிவிப்பு 

இந்தியா, இங்கிலாந்து இடையே நடைபெறவிருந்த 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே 4 போட்டிகள் முடிவுற்ற நிலையில், இறுதி டெஸ்ட் போட்டி இன்று தொடங்க இருந்த‌து. ஆனால், சில தினங்களுக்கு முன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பயிற்சியாளர்கள் பாரத் அருண், ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்திய வீர‌ர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்