பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் போட்டி - வெள்ளி வென்றார் சுஹாஸ் யதிராஜ்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார்.
பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் போட்டி - வெள்ளி வென்றார் சுஹாஸ் யதிராஜ்
x
டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய  வீரர் சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார். இன்று நடைபெற்ற ஆடவர் SL-4 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், பிரான்ஸ் வீரர் லூகாஸ் மசூருடன் யதிராஜ் மோதினார். இதில் முதல் செட்டை 21-க்கு 15 என்ற கணக்கில் யதிராஜ் வென்றார். இருப்பினும் அடுத்த 2 செட்களையும் பிரான்ஸ் வீரர் கைப்பற்றி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் யதிராஜுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பதக்கம் வென்றுள்ள யதிராஜ், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்