டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - தங்கம் வென்றார் பிரமோத் பகத்

பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீர‌ர் பிரமோத் பகத் தங்கம் வென்றார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் - தங்கம் வென்றார் பிரமோத் பகத்
x
பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீர‌ர் பிரமோத் பகத் தங்கம் வென்றார். ஆண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் பிரிட்டன் வீர‌ர் டேனியல் பெத்தெலை பிரமோத் பகத் எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரமோத், முதல் செட்டை 21க்கு 14 என்ற புள்ளிகளில் கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டில் 21க்கு 17 என்ற கணக்கில் பிரிட்டன் வீர‌ரை வீழ்த்தினார். இதன் மூலம் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4வது தங்கத்தை பிரமோத் பகத் பெற்று தந்துள்ளார். ஒடிசாவை சேர்ந்த 33 வயதான பேட்மிண்டன் வீர‌ர் பிரமோத் பகத் 4 முறை உலக சாம்பியன்பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்