இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 191 ரன்களில் சுருண்ட இந்தியா

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தும் தடுமாற்றத்தை சந்தித்தது.
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 191 ரன்களில் சுருண்ட இந்தியா
x
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தும் தடுமாற்றத்தை சந்தித்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பந்துவீச்சாளர் ஷ்ராதுல் தாகூர் 57 ரன்களும், கேப்டன் கோலி 50 ரன்களும் அடித்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்தின் தொடக்க வீரர்களான பர்ன்ஸ் மற்றும் ஹமீதை பும்ரா வெளியேற்றிய நிலையில், அந்த அணி கேப்டன் ஜோ ரூட், 21 ரன்களில் உமேஷ் யாதவின் வேகத்தில் கிளீன் போல்டானார். இதனால், முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்தது.

Next Story

மேலும் செய்திகள்