டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி - அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
x
சீன தைபேவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை தாய் சு யிங்கை, அரையிறுதியில் பி.வி. சிந்து எதிர்கொண்டார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில், சீன தைபே வீராங்கனை சு யிங், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது அட்டகாசமான ஷாட்களால், சிந்துவை களத்தில் அங்கும் இங்கும் அலைய வைத்த அவர், முதல் செட்டை தனதாக்கினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சு யிங், அந்த செட்டையும் கைப்பற்றி, 21-க்கு 18, 21-க்கு 12 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெற்ற நிலையில், தோல்வியைத் தழுவிய சிந்து, நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீன வீராங்கனை ஹீ பிங்ஜியோவுடன் மோத உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்