ஜப்பானில் கொரோனா தொற்று புதிய உச்சம் - தீவிர கொரோனா கட்டுப்பாடுகள் அமல்
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில், ஜப்பானில் மேலும் 4 நகரங்களில் கொரோனா கால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில், ஜப்பானில் மேலும் 4 நகரங்களில் கொரோனா கால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வரும் நிலையில், ஜப்பானில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், அதை சுற்றியுள்ள மேலும் 4 நகரங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஜப்பான் பிரதமர் அளித்த பேட்டியில். புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவித்து உள்ளார்.
Next Story