டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி - நம்பர் ஒன் வீரர் அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீரர், கெண்டோ மொமோட்டா தோல்வி அடைந்து வெளியேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி - நம்பர் ஒன் வீரர் அதிர்ச்சி தோல்வி
x
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீரர், கெண்டோ மொமோட்டா தோல்வி அடைந்து வெளியேறினார். குரூப் ஏ பிரிவில் தனது முதல் லீக் ஆட்டத்தில், தென் கொரிய வீரர் ஹியோ ஹாங் ஹீயுடன், ஜப்பானை சேர்ந்த மொமோட்டோ மோதினார். இதில், 21-க்கு 15, 21-க்கு 19 என்ற செட் கணக்கில் ஹீ வெற்றி பெற்று மொமோட்டாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த தோல்வியால், மொமோட்டோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறி உள்ளார். டென்னிஸில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்ததைப் போல், பேட்மிண்டனில் முன்னணி ஜப்பான் வீரர் தோல்வி அடைந்து வெளியேறி இருப்பது, உள்ளூர் ரசிகர்களை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்