டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய வீராங்கனை லவ்லினா பார்ஹோஹெய்ன் முன்னேறி உள்ளார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய வீராங்கனை லவ்லினா பார்ஹோஹெய்ன் முன்னேறி உள்ளார். மகளிர் 69 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெட்சுடன், லவ்லீனா மோதினார். 4 கட்டங்களாக நடந்த இந்த போட்டியில், 3-க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் லவ்லீனா வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். வருகிற 30-ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில், சீன தைபே வீராங்கனை சின் சென்னுடன், லவ்லீனா விளையாட உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்