ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி - இந்திய வீராங்கனைகள் மனிகா, சுதிர்தா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனிகா பத்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகிய இருவரும் 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
x
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனிகா பத்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகிய இருவரும் 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் பிரிட்டன் வீராங்கனை டின் டின் ஹோவும் மனிகாவும் மோதினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மனிகா, தொடர்ச்சியாக நான்கு செட்களைக் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல், மற்றொரு வீராங்கனை சுதிர்தா முகர்ஜி, ஸ்வீடன் வீராங்கனை லிண்டாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்