3வது ஒரு நாள் கிரிக்கெட் - ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியா-இலங்கை இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மழை காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதன்பின், இரு அணிகளுக்கும் 47 ஓவர்கள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இலங்கை அணியின் அவிஷ்கா 76 ரன்கள் குவித்தார். பனூகா ராஜபக்ஷா 65 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, இலங்கை 39 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்தியா 3-க்கு 2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Next Story