ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா
x
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

வருகிற 23-ம் தேதி ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள், டோக்கியோ நகரில் உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ள 2 தடகள வீரர்களுக்கு, கொரோனா உறுதியாகி உள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று போட்டி ஏற்பாட்டாளர் ஒருவருக்கும் அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், போட்டியை நடத்தும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்