இந்தியா Vs பாகிஸ்தான் மோதல் : டி20 உலக கோப்பை - ஐசிசி அறிவிப்பு

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் மோத இருக்கிறது, இந்திய அணி. இதுபற்றி பார்க்கலாம்....
இந்தியா Vs பாகிஸ்தான் மோதல் : டி20 உலக கோப்பை - ஐசிசி அறிவிப்பு
x
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை, கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த போட்டியில், 12 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்க உள்ளன.இதில் குரூப் 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும்,
குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.  மற்ற நான்கு இடங்களுக்கு தகுதிச்சுற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருப்பது, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வழக்கமாக சீரியலை விரும்பி பார்க்கும் பெண்களையும் சீட்டின் நுனிக்கே சென்று கிரிக்கெட் பார்க்க வைத்தது... 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா,  பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கோப்பை அரையிறுதி போட்டி.மார்ச் 30 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியை உலகெங்கும் 6 கோடியே 73 லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு டிவியில் பார்த்து ரசித்தது., இன்றளவும் பெரிய ரெக்கார்டாக பார்க்கப்படுகிறது. களத்தில் இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கையே சற்று ஓங்கியிருந்தாலும், உலக கோப்பை தொடரை பொறுத்தவரை, இதுவரை ஒரு முறை கூட இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதில்லை...
 இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை 50 ஓவர் உலக கோப்பை போட்டியிலும், ஐந்து முறை 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் களம் கண்டதில்... அனைத்திலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடியிருப்பது... இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக விளங்கியவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.... 3 முறை 'மேன் ஆப் தி மேச்' பட்டத்தை தன் வசமாக்கியிருந்தார், சச்சின்..அந்த வரிசையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருபவர், விராட் கோலி... ஒரு முறை 50 ஓவர் உலக கோப்பையிலும், இரு முறை டி-20 உலக கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 'மேன் ஆப் தி மேச்'  பட்டத்தை கைப்பற்றியிருந்தார், விராட்...மறுபுறம், சமீபத்தில் இங்கிலாந்து அணியுடன் 50 ஓவர் போட்டியில் தனது படுதோல்விகளால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது, பாகிஸ்தான் அணி. இதனால் கோலி தலைமையிலான இந்திய அணியும் Vs பாபர் அசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதும் டி20 உலக கோப்பையில்.... இந்திய அணிக்கே கூடுதல் பலம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போட்டி போட்டு கொண்டு டிவீட் செய்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்