ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள்; தேசம் பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் குறித்து தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் குறித்து தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக, பல்வேறு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக பங்கேற்ற விளையாட்டு வீரர்களைக் குறித்து தேசம் பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தினத்தையொட்டி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விளையாட்டிற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் பிற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது என பிரதமர் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், நமது குழுவினர் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரித்துக் கொள்கிறேன் என்றும், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் வரை, மைகவ் இணையதளத்தில் ஒரு சுவாரஸ்யமான வினாடி-வினா நடக்க உள்ளது என்றும், அதில் இளம் நண்பர்களை பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story