ஆசிய குத்துச்சண்டை இறுதிப் போட்டி - இந்திய வீராங்கனை பூஜா ராணி வெற்றி
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய மகளிர் அணி, 10 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய மகளிர் அணி, 10 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர், துபாயில் நடந்தது. இதில், மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை பூஜா ராணியும், உஸ்பெகிஸ்தான் வீராங்கனை மாவ்லோனாவும் மோதிக் கொண்டனர். இதில் நடப்பு சாம்பியனான பூஜா ராணி, மாவ்லோனாவை எளிதில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மேலும், மொத்தமாக இந்த தொடரில் இந்திய வீராங்கனைகள், ஒரு தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
Next Story