கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று - ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தம்

கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
x
கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்த சூழலில் போட்டிகளில் பங்கு பெற்ற கொல்கத்தா, சென்னை, ஐதராபாத் அணிகளை சேர்ந்த வீரர்களுக்கும், பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இந்நிலையில் நிலை குறித்து ஆலோசிக்க மேற்கொள்ளப்பட்ட பிசிசிஐ அவசரக் கூட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெற்றுள்ள வீரர்கள், பணியாளர்களின் பாதுகாப்பை சமரசம் செய்ய விரும்பவில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. இதற்கிடையே துணை தலைவர் ராஜீவ் சுக்லா, போட்டிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது என்றும் போட்டிகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்