டி.என்.பி.எல். 2021 கிரிக்கெட் தொடர் - ஜூன் 4ஆம் தேதி தொடங்க உள்ளது

தமிழகத்தில் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 4ந்தேதி தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
டி.என்.பி.எல். 2021 கிரிக்கெட் தொடர் - ஜூன் 4ஆம் தேதி தொடங்க உள்ளது
x
தமிழ்நாடு கிரிக்கெட் பிரீமியர் லீக் என அழைக்கப்படும் டி.என்.பி.எல். டி20 தொடரை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா கெடுபிடிகளால், இந்தப் போட்டி நடைபெறாத நிலையில், இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எல். தொடருக்கு பி.சி.சி.ஐ.யும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 8 அணிகள் களமிறங்கும் இந்தத் தொடரின் முதல் போட்டி, ஜூன் 4ம் தேதி நெல்லையில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜூன் 29ம் தேதி முதல் தகுதிச் சுற்றும், ஜூலை 4ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகின்றன. உள்ளூர் போட்டிகள், சர்வதேச போட்டிகள் மற்றும் ஐ.பி.எல். தொடரில் பின்பற்றப்படும் கொரோனா கட்டுப்பாடுகள், டி.என்.பி.எல். தொடரிலும் முறையாக பின்பற்றப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்